தொடர் விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்

மக்கள் ஒரே நேரத்தில் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தொடர் விடுமுறை தினங்களையொட்டி, சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். நாளை சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை தினமாகும். அதன் பின்னர் வார விடுமுறை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் ஒரே நேரத்தில் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஐயஞ்சேரி சிக்னல் முதல் வண்டலூர் பாலம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் 300 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






