ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: பரபரப்பு தகவல்


ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: பரபரப்பு தகவல்
x

காளிமுத்துவுக்கு சந்தனக்குமார் மாமா உறவு முறை ஆகும்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் சந்தனக்குமார் (வயது 44). இவரது மனைவி ஜெயலட்சுமி (38). இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் குடியிருந்து பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளான்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்குமாரின் உறவினரான ஒட்டன்சத்திரம் சாலைப்புதூரை சேர்ந்த காளிமுத்து (29) என்பவர் பனியன் ஆலை வேலைக்காக திருப்பூர் வந்துள்ளார். உறவினர் என்பதால் தனது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்துள்ளார். அதையடுத்து காளிமுத்துவும் அவரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். காளிமுத்துவுக்கு சந்தனக்குமார் மாமா உறவு முறை ஆகும்.

ஒரே வீட்டில் வசித்ததால் காளிமுத்துவுக்கும், சந்தனக்குமாரின் மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து அறிந்த சந்தனக்குமார், மனைவி மற்றும் காளிமுத்துவை கண்டித்துள்ளார். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சந்தனக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனினும் காளிமுத்து, சந்தனக்குமாரின் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இதனிடையே இவர்களின் கள்ளக்காதல் பற்றி அறிந்த காளிமுத்துவின் குடும்பத்தினரும் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி ஜெயலட்சுமி, காளிமுத்து ஆகியோர் நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் வந்து பின்னர் அரங்கநாதபுரத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்துக்கு சென்றனர். அப்போது அங்கு கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரைக்கு சென்ற ரெயில் முன் பாய்ந்தனர். இதில் அவர்கள் 2 பேரும் உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பழனி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story