கடலூர்: 35 கிலோ கஞ்சா பறிமுதல் - 10 பேர் கைது


கடலூர்: 35 கிலோ கஞ்சா பறிமுதல் - 10 பேர் கைது
x

கடலூரில் 35 கிலோ கஞ்சாவை கடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர் போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பண்டுட்டி கிராமம் புத்துமாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான சிலர் சுற்றித்திரிவதை பார்த்த போலீசார் அவர்களிடன் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 35 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த போதைப்பொருட்களுக்கு கடத்திய நபர்களை கைது செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த போதைப்பொருளுக்கு தொடர்புடைய கடலூரை சேர்ந்த 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story