தீபாவளி பண்டிகை: ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் தேசிய விடுமுறை நாள் என்பதால், சென்னையில் 20-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






