நிர்மலா சீதாராமனுடன் திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு

நிர்மலா சீதாராமனை திமுக எம்.பி. அருண் நேரு சந்தித்து பேசினார்.
நிர்மலா சீதாராமனுடன் திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு
Published on

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை திமுக எம்.பி. அருண் நேரு நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மக்கள் பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை நிர்மலா சீதாராமனிடம் அவர் வழங்கினார்.

இதுகுறித்து திமுக எம்.பி. அருண் நேரு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

புதுடெல்லியில், பொதுமக்களின் வாழ்கையை நேரடியாக பாதிக்கும் இரண்டு முக்கியமான விவகாரங்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து முன்வைத்தேன்:

* கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அவசர திருத்தங்கள் இந்தியா முழுவதும் உள்ள கடன் வாங்கும் பொதுமக்களுக்கு நியாயம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.

* PACL Ltd மோசடியில் தாங்கள் வியர்வை சிந்தி சேமித்த சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், குறிப்பாக துரையூர் பெண்களுக்கும், விரைவான பணத்தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com