சாலை தோண்டும் போது மின்புதைவடங்கள் பாதிக்கபடாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – மின்வாரிய தலைவர் வேண்டுகோள்

பொது மக்களுக்கு மின்தடை பாதிப்பு ஏற்படமால் தவிர்க்க முடியும் என்றும் மின்வாரிய தலைவர் அறிவுறித்தினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை மற்றும் அதை சுற்றிஉள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் அவர்களின் பணிகளை மேற்கொள்ளும் பொழுது மின்வாரியத்தின் புதைவடங்களை பழுது செய்து விடுகிறார்கள். இதனால் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் முக்கியமாக இரவு நேரங்களில் தேவையற்ற மின்தடை ஏற்பட்டு மின் நுகர்வோர்க்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன்,அவர்களின் தலைமையில் விரிவான கலந்தாய்வு கூட்டம் நெடுஞ்சாலைத் துறை ,மெட்ரோ ரெயில் , குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மற்றும் துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நடைபெற்றது. மின்வாரியத்தின் தலைவர் அவர்கள் துறை அதிகாரிகளிடம் சாலை தோண்டும் பணிகளை மேற்கொள்ளும் பொழுது இனிவரும் காலங்களில் மின்புதைவடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பணிகளை சம்பந்தப்பட்டதுறையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறித்தினார். மேலும் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக புதைவட வரைபடங்களை மின்வாரியத்திடமிருந்து பெற்றுக்கொண்டு அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பணிகளை மேற்கொள்ளும் பொழுது புதைவடங்கள் இருந்தால் உடனே பணிகளை நிறுத்தி அருகில் உள்ள மின்வாரியஅலுவலகத்தில் அந்த புடைவடத்தின் மின்பாதை தகவல்களை பெற்று கொள்ள அறிவுறுத்தினார். அவ்வாறு செய்வதால் பணிகள்செய்யும் பொழுது ஏற்படும் மின்விபத்துகள் மற்றும் பொது மக்களுக்கு மின்தடை பாதிப்பு ஏற்படமால் தவிர்க்க முடியும் என்றும் மின்வாரிய தலைவர் அறிவுறித்தினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.