'விஜய் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' - சரத்குமார்


விஜய் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - சரத்குமார்
x

தி.மு.க.வை எதிர்ப்பதை தனது கொள்கை என்று விஜய் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய பட்ஜெட், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், பெருமைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்று நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;-

"மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, ஆந்திரா என தனித்தனியாக சொல்லவில்லை. ஆனால், ஒட்டுமொத்த நாட்டுக்காகத்தான் செலவு செய்யப்பட உள்ளது. இந்தியாவின் பெருமைக்காகவும், வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய், தி.மு.க.வை எதிர்ப்பதே தனது கொள்கை என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு இதையெல்லாம் செய்யவில்லை, அதை நான் செய்கிறேன் என்று அவர் சொன்னால் அது கொள்கையாக இருக்கும். மக்களுக்காக என்ன செய்யப்போகிறார் என்பதை அவர் சொல்ல வேண்டும்."

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

1 More update

Next Story