மதுரை: அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை

பவன்குமார் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மதுரை: அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
Published on

மதுரை,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொதுட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குருமோகன். இவருடைய மகன் பவன்குமார் (வயது 22). இவர் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், மதுரை தல்லாகுளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.  இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பவன்குமார் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதுபற்றி தகவல் அறிந்து மீட்கப்பட்ட அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

எனினும், சிகிச்சையில் இருந்த பவன்குமார் நேற்று மாலை உயிரிழந்தார். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பவன்குமாரின் கண்கள் அவர் பயின்ற மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com