ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு - வைகோ பேச்சு


ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு - வைகோ பேச்சு
x

திமுக வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

சென்னை,

சென்னை பூந்தமல்லியில் மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

என் உயிரைத் தியாகம் செய்கிறேன்.ஆனால், சிலர் மதிமுக இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். மதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார்கள். எத்தனை நெருக்கடிகள், எத்தனை துரோகங்கள், அத்தனைக்கும் மத்தியில்தான் நான் 31 ஆண்டுகளாக மதிமுகவை கட்டிப் பாதுகாத்து வருகிறேன் ஒருமுறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்.மற்ற இரண்டு முறை எப்போது காப்பாற்றினார்? மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. திமுக கூட்டணியில்தான் நாங்கள் எந்த சூழ்நிலையிலும் நீடிப்போம்; திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம்; இது என் கட்டளை என்றார்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story