மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

அச்சன்புதூர் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தென்காசி
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட அச்சன்புதூர் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (17.6.2025, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் பின்வரும் நேரத்தில் மின் விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:
வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






