மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் நாளை (10.10.025, வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம், சாகிர்உசேன்நகர், நேரு காலனி கிழக்குப் பகுதி, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், சவேரியார்புரம், மாதாநகர், ராஜபாளையம், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளபட்டி, தருவைகுளம்,
பட்டிணமருதூர், உப்பள பகுதிகள், பனையூர், அனந்தமடபச்சேரி, வாழசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம் மற்றும் திரேஸ்புரம், பூபாலராயர்புரம், அலங்காரதட்டு, எஸ்.எஸ்.மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், முத்துகிருஷ்ணாபுரம், ராமர்விளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






