மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் நாளை (19.12.2025, வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இனிகோநகர், ரோச்காலனி சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம்,
பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலிபோன்காலனி, தாமஸ்நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர் சந்தை ரோடு, காந்திநகர், மேல சண்முகபுரம் 2வது தெரு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியாநகர், ராஜபாண்டிநகர், பெரியசாமிநகர், எம்.ஜி.ஆர்.நகர் முடுக்கு காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.






