மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடியில் வாகைகுளம் துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக மின்விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வாகைகுளம் துணைமின் நிலையத்தில் நாளை (7.1.2026, புதன்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வாகைகுளம் துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், போடம்மாள்புரம், சிறுபாடு,
திரவியபுரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல் புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோனியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், பேரூரணி வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






