டெல்லி செல்லும் எண்ணம் இல்லை; செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


டெல்லி செல்லும் எண்ணம் இல்லை; செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

கோப்புப்படம் 

சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

திண்டுக்கல்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அவர் 10 நாட்களில் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வருகிற 15-ம்தேதி அண்ணா பிறந்தநாளில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று கூறியிருந்தார்.

செங்கோட்டையனின் இந்த அறிவிப்பை அடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. இதையடுத்து, டெல்லி சென்ற செங்கோட்டையன் உள்துறை மந்திரி அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். செங்கோட்டையன் விதித்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அதிமுகவில் அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செங்கோட்டையன் கொடுத்த கெடு நாளை முடிவடையும் நிலையில், அவர் ஒரு நல்லசெய்தி சொல்வார். சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. கூடிய விரைவில் சந்திப்பேன். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் சந்திப்பேன். விஜய் உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். அது நல்லவிதமாக நடக்கும்.

டெல்லி செல்லும் எண்ணம் இல்லை. நயினார் நாகேந்திரன் இரண்டு தினங்களுக்கு முன்பு செல்போனில் பேசினார். சந்திக்கவேண்டும் என்று சொன்னார். உறுதியாக சந்திப்போம் என்று சொல்லி உள்ளேன். எடப்பாடி பழனிசாமியை மாற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவேன் என்று டிடிவி தினகரன் சொன்னது குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story