ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி சடலமாக மீட்பு - சென்னையில் பரபரப்பு


ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி சடலமாக மீட்பு - சென்னையில் பரபரப்பு
x

டெய்சிராணி செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வெளியெ சென்றார்.

சென்னை,

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோசப். இவரது மனைவி டெய்சி ராணி(வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக டெய்சிராணி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தேவாலயத்திற்கு சென்று வந்தார்.

கடந்த 21-ந்தேதி வீட்டில் இருந்தபோது டெய்சி ராணி தனது இளைய மகனை படிக்குமாறு தெரிவித்தார். இதனால் தாய்-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த டெய்சிராணி செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வெளியெ சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வீட்டை விட்டு வெளியேறிய டெய்சிராணி ஆட்டோ ஒன்றில் ஏறி பல்லாவரம் வரை சென்று இருப்பது பதிவாகி இருந்தது. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பெசன்ட் நகர் கடற்கரையில் டெய்சிராணி பிணமாகக் கிடந்தார். மன வேதனையில் இருந்த அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story