ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல்மழை; இதமான காலநிலையை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள்


ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல்மழை; இதமான காலநிலையை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள்
x

ஏற்காட்டில் நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.

சேலம்,

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் விடுமுறை தினத்தையொட்டி இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடிஸ் சீட், பக்கோடா பாயின்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், பொட்டானிக்கல் கார்டன், ஐந்தினை பூங்கா போன்ற இடங்களில் குடும்பத்துடன் சென்று ரசித்தனர்.

இதனிடையே ஏற்காட்டில் இன்று மதிய வேளையிலும் பனிமூட்டம் நிலவியது. பனிமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல்மழையும் பெய்தது. அங்கு நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர். மேலும் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஒண்டிக்கடை ரவுண்டானா, அண்ணா பூங்கா சாலை உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

1 More update

Next Story