

சென்னை,
தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் ஆஜராவதற்காக மூத்த வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, முன்னாள் தலைமை அரசு வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், மூத்த வக்கீல்கள் என்.ஜோதி, ஏ.கே.ஸ்ரீராம் மற்றும் வக்கீல் பரணிதரன் ஆகியோரை நியமித்து இதற்கான அரசாணையை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.