13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கார் டிரைவர் கைது

கோப்புப்படம்
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் கீழ காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்தீஸ்வரன் (19 வயது), கார் டிரைவர். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை தனியாக அழைத்து சென்றுள்ளார்.
ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து சிறுமிக்கு, கார்த்தீஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து வீட்டுக்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.
இதைக்கேட்ட சிறுமியின் தாயார் உடனடியாக கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார்த்தீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






