பாலியல் தொல்லை... கடும் நடவடிக்கை வேண்டும் - செல்வப்பெருந்தகை


பாலியல் தொல்லை... கடும் நடவடிக்கை வேண்டும் - செல்வப்பெருந்தகை
x

ரெயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அதிகளவில் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்டர்சிட்டி விரைவு ரெயில், வேலூர் அருகே சென்ற போது, கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, தள்ளிவிடப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த கொடூரச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பெண்கள் பயணிக்கும் ரெயில் பெட்டிகளுக்கு துப்பாக்கி ஏந்திய, ரெயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அதிகளவில் பணியில் ஈடுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story