அயோத்திதாசரை திராவிட மாடல் அரசு போற்றி வருகிறது: மு.க.ஸ்டாலின் பதிவு

'சமத்துவத்தை வலியுறுத்திய அயோத்திதாசரின் கருத்துகள் வலுக்கட்டும்' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாளையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்:சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1,000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர்- எனத் 'திராவிடப் பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு! சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!"
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






