தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 Oct 2025 4:24 PM IST (Updated: 7 Oct 2025 5:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஒருவரை, முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 6.9.2025 அன்று ஒருவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட, விளாத்திகுளம், சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த அம்சத்கான் மகன் அப்துல் (வயது 22) என்பவரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story