திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

திருநெல்வேலியில் அடிதடி வழக்கில் தொடர்புடைய வாலிபர் ஜாமினில் வெளியே வந்த பிறகு ஒரு மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு அடிதடி வழக்கில் ஈடுபட்ட நாரணம்மாள்புரத்தை சேர்ந்த மகாராஜன் (வயது 30) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இதனையடுத்து அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த ஒரு மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மகாராஜனை முன்னீர்பள்ளம் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இன்று (5.6.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story






