திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

நாங்குநேரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட பட்டர்புரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 24) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 10½ மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுரேஷை நாங்குநேரி காவல் நிலைய போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று (10.6.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story