திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

தேவர்குளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தேவர்குளத்தை சேர்ந்த சின்னத்துரை கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தேவர்குளத்தை சேர்ந்த சின்னத்துரை (வயது 35) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த இரண்டரை மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சின்னத்துரையை, தேவர்குளம் போலீசார் தேடி வந்த நிலையில் இன்று (30.5.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story






