கழுகுமலையில் பூச்சி மருந்து குடித்து வியாபாரி தற்கொலை


கழுகுமலையில் பூச்சி மருந்து குடித்து வியாபாரி தற்கொலை
x

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிட்டங்கி தெரு பகுதியை சேர்ந்த வியாபாரி, கழுகுமலை கீழபஜாரில் காந்தி மைதானம் அருகே டீ கடை நடத்தி வந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிட்டங்கி தெரு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 68), வியாபாரி. இவர் கழுகுமலை கீழபஜாரில் காந்தி மைதானம் அருகே டீ கடை நடத்தி வந்தார். இவருக்கு சிவராம்பாள்(65) என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காளியப்பன் சில மாதங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story