யாரோ எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: மா.சுப்பிரமணியன் விமர்சனம்

விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்
சென்னை,
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார் . பிரசாரத்தில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லை என தெரிவித்தார் .
இந்த நிலையில், விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
தவெக தலைவர் விஜயின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது.நாகை மருத்துவமனைக்கு சென்று விஜயை பார்க்கச் சொல்லுங்கள். என தெரிவித்தார்.
Related Tags :
Next Story






