30 மணி நேரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கே சென்றார்?


30 மணி  நேரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கே சென்றார்?
x

நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார்.

கரூர்,

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தன்று கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களை சந்திக்காமல், நீலாங்கரை வீட்டுக்குச் சென்ற விஜய், எக்ஸ் தளத்தில் இரங்கல் பதிவிட்டிருந்தார்.

தொண்டர்களும் மக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவத்தை அறிந்தும், திருச்சியில் இருந்து கரூருக்கு திரும்பாமல் சென்னை வந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதனிடையே, கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார்.

இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் தனது காரில் புறப்பட்டார். தனது பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழலில் விஜய் சென்ற நிலையில், அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை என்பதால் “கரூர் செல்கிறாரா?” என்ற பரபரப்பு ஏற்பட்டது. எனினும், விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். விஜய் சென்றதும் அவரது வீட்டிற்கு பட்டினம்பாக்கம் போலீசாரும் சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

1 More update

Next Story