தமிழகத்தில் 8 நகரங்களில் வெயில் சதம்- கரூரில் 104 டிகிரி பதிவு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, கரூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 140 டிகிரி வெப்பம் பதிவானது.
அதன்விவரம் வருமாறு:-
கரூர் பரமத்தி - 104 டிகிரி ( 40 செல்சியஸ்)
வேலூர் - 102.74 டிகிரி ( 39.3 செல்சியஸ்)
ஈரோடு - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)
திருச்சி - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம்- 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)
சேலம் - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)
திருத்தணி - 100 டிகிரி (38 செல்சியஸ்)
Related Tags :
Next Story






