நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு


நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அந்த வகையில், நெல்லை உள்ளிட்ட தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story