சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை

சென்னையில் இன்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியில் இருந்து திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





