பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x

பாதுகாப்புப்படையினர் 3 பேர் காயமடைந்தனர்.

லாகூர்,

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை ஒழிக்க பாதுகாப்புப்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் ஹங்கு மாவட்டம் சின்வாரி சர்ஹரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அங்கு சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினரும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதல் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படையினர் 3 பேர் காயமடைந்தனர்.

1 More update

Next Story