பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 48 மணிநேர சண்டை நிறுத்தம் அமல்


பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 48 மணிநேர  சண்டை நிறுத்தம் அமல்
x

பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லமாபாத்,

ஆப்​கன் தலைநகர் காபூல் மற்​றும் கிழக்கு பகு​தி​யில் உள்ள சந்தை ஆகிய​வற்​றில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. ஆனால் இந்த தாக்​குதலுக்கு பாகிஸ்​தான் பொறுப்​பேற்​க​வில்​லை. பாகிஸ்​தானில் செயல்​படும் தெக்​ரிக் இ-தலி​பான்​களுக்கு (டிடிபி) ஆப்​கானிஸ்​தானில் அடைக்​கலம் கொடுப்​ப​தை​யும், ஆயுதப் பயிற்சி அளிப்​ப​தை​யும் தலி​பான் அரசு நிறுத்தி கொள்ள வேண்​டும் என்று மட்​டும் பாகிஸ்​தான் அறிக்கை வெளி​யிட்​டது கடந்த 2021-ம் ஆண்டு முதல் தெக்​ரிக் இ-தலி​பான்​கள் நடத்​திய தாக்​குதலில் பாகிஸ்​தான் வீரர்​கள் நூற்​றுக்​கணக்​கானோர் உயி​ரிழந்​தனர் என பாகிஸ்​தான் குற்றம் சாட்​டியது.

இந்​நிலை​யில் பாகிஸ்​தான் தாக்​குதலுக்கு பழி​வாங்​கும் நடவடிக்​கை​யாக, பாகிஸ்​தான் எல்லை மீது ஆப்​கன் படை​யினர் நேற்று முன்​தினம் இரவு தாக்​குதல் நடத்​தினர். இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் தீர்க்கப்படாத மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு காண இரு தரப்பும் தீவிர முயற்சிகளை மேற்கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தான் சண்டை நிறுத்தம் கோரியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. எனினும், ஆப்கானிஸ்தான் இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

1 More update

Next Story