செங்கடலில் பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்


செங்கடலில் பயணித்த கப்பல் மீது  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 6 July 2025 7:58 PM IST (Updated: 6 July 2025 7:59 PM IST)
t-max-icont-min-icon

ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

சனா,

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்தியும், சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு கப்பலில் இருந்த பாதுகாப்புப்பிரிவினரும் துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய சரக்கு கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

1 More update

Next Story