மக்கள் நாட்டை ஆளக்கூடிய பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களியுங்கள் - அண்ணாமலை பிரசாரம்


மக்கள் நாட்டை ஆளக்கூடிய பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களியுங்கள் - அண்ணாமலை பிரசாரம்
x
தினத்தந்தி 15 April 2024 11:04 AM GMT (Updated: 15 April 2024 11:18 AM GMT)

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் என்று கூட தெரியாமல் கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை,

தமிழக பா.ஜ.க. கட்சியின் மாநில தலைவரும், கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் பகுதிக்கு உட்பட்ட ஆண்டிபாளையம், இடுகம்பாளையம், முருகம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட 10 தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வீரபாண்டி பகுதியில் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது

மக்கள் அனைவரும் மூன்றாவது முறையாக நமது பாரதப் பிரதமர் தலைமையில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர். கடந்த 10 ஆண்டு காலம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி விவசாயம், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட கட்டமைப்புகளை திறன்பட செயல்படுத்துவதோடு, பெண்களுக்கு, மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்து நாட்டின் வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

மக்கள் நாட்டை ஆளக்கூடிய பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களியுங்கள். தற்போது வரை இந்திய கூட்டணி கட்சியில் பிரதமர் யார் என்று தெரியாமல் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் சிந்திக்க வேண்டும் பிரதமருக்கான தேர்தல் இது. யார் பிரதமராக நிற்க வேண்டும் என்று புரிந்து வாக்களிக்க வேண்டும். இந்திய கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராகுல் காந்தியை வேட்பாளராக அறிவித்துள்ளது.

இவர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் எப்படி நாட்டை ஆள முடியும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. 98 கோடி மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர். அனைத்து மக்களின் குரல் ஒன்றுதான் மீண்டும் மோடி ,வேண்டும் மோடி என்று மக்கள் உரக்க சொல்லி வருகின்றனர். மேலும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 10 தொகுதிகள் உள்ளது.

நான் வெற்றி பெற்றால் அனைத்து வகையான அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வேன் என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். கடைசி மூன்று நாட்கள் உள்ளது. இதில் திராவிட கட்சிகள் மின்சாரத்தை துண்டித்து உங்களுக்கு பணம் பொருள் கொடுக்க முயற்சி செய்யலாம். பொன்னும் பொருளும் கொடுத்தாலும் மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள். மக்கள் சிந்தித்து தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.


Next Story