ராகுல் காந்தி பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வாருங்கள்- செல்வப்பெருந்தகை அழைப்பு


ராகுல் காந்தி பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வாருங்கள்- செல்வப்பெருந்தகை அழைப்பு
x

தமிழகத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ராகுல் காந்தி நாளை வருகை புரிகிறார்

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியா கூட்டணி சார்பாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ராகுல் காந்தி வருகை புரிகிறார்.அதேபோல, மாலை 6 மணிக்கு கோயமுத்தூர் செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பங்கேற்கிறார். இந்த தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு அணி அணியாக, அலைகடலென மக்கள் திரண்டு வருகை புரிந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய அன்போடு அழைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story