2-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு.. மழையால் ஓவர்கள் குறைப்பு


2-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு.. மழையால் ஓவர்கள் குறைப்பு
x

image courtesy:twitter/@BCCIWomen

2-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு.. மழையால் ஓவர்கள் குறைப்பு

லண்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முதல்முறையாக வென்ற இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் சவுத்தம்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று மாலை 3.30 மணியளவில் தொடங்க இருந்தது.

ஆனால் அங்கு மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த ஆட்டம் தலா 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட உள்ளது.

1 More update

Next Story