5-வது டெஸ்ட்: மைதான கண்காணிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கம்பீர்.. வீடியோ வைரல்


5-வது டெஸ்ட்: மைதான கண்காணிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கம்பீர்.. வீடியோ வைரல்
x

இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணியினர் ஓவல் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணியினரிடம் ஓவல் மைதான கண்காணிப்பாளர் எதோ கூறியதாக தெரிகிறது. இதனால் கடுப்பான தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், மைதான கண்காணிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதில் கவுதம் கம்பீர், மைதான கண்காணிப்பாளரை நோக்கி, "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்ல தேவைவில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எங்களிடம் சொல்ல முடியாது. நீங்கள் ஒரு மைதான கண்காணிப்பாளர். எனவே நீங்கள் மைதான கண்காணிப்பாளர் போல இருங்கள்" என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story