ரசிகர்களுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரேவிஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று பிற்பகலில் அறிவித்தது.
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று பிற்பகலில் அறிவித்தது.
இந்திய வீரர்களில் பலர் உடனடியாக தங்களது வீடுகளுக்கு திரும்பியதாகவும், வெளிநாட்டு வீரர்களும் விமானம் மூலம் தங்களது நாட்டுக்கு புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இந்த நிலையில் ரசிகர்களுக்கு சென்னை வீரர் டெவால்ட் பிரேவிஸ் நன்றி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
சென்னை அணிக்கும், பயிற்சியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனுபவம் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்தியா முழுவதும் இருந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இங்கு செலவழித்த நாட்கள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. சென்னையில் இருந்த நாட்கள் என் வாழ்நாள் முழுமைக்குமானவை. மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன். என தெரிவித்துள்ளார் .