முதல் ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

இலங்கை சார்பில் ஹஸரங்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முதல் ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
Published on

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் பகர் ஜமான் 32 ரன்களும், சைம் அயுப் 6 ரன்களும் , பாபர் அசாம் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சல்மான் ஆகா , ஹுசைன் தலத் மட்டும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய சல்மான் ஆகா சதமடித்து அசத்தினார்.

ஹுசைன் தலத் அரைசதமடித்தார். முகமது நவாஸ் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 299 ரன்கள் எடுத்தது. இலங்கை சார்பில் ஹஸரங்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com