முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்த நேபாளம்

image courtesy:twitter/@CricketNep
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ரோகித் பவுடல் வென்றார்.
சார்ஜா,
வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் அகீல் ஹொசைன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரோகித் பவுடல் 38 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 149 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் நேபாளம் சிறப்பாக பந்துவீசி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. நேபாள அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் திணறியது.
20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக நவீன் பிடாசி 22 ரன்கள் அடித்தார். நேபாளம் தரப்பில் குஷல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நேபாளம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.






