தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அரைசதம்: சாதனை படைத்த பிரதிகா ராவல்

அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் விளாசினார்.
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் விளாசினார்.
இதனையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவரில் 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சினே ராணா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்த போட்டியில் 78 ரன்கள் எடுத்த பிரதிகா ராவல் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் மகளிர் ஒருநாள் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 500 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார்.
அதிவேக 500 ரன்கள் குவித்த வீராங்கனைகள் விவரம்:- பிரதிகா ராவல் - 8 இன்னிங்ஸ் (இந்தியா) சார்லோட் எட்வர்ட்ஸ் - 9 இன்னிங்ஸ் (இங்கிலாந்து) , நிக்கோல் போல்டன் - 11 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா).






