ரிஸ்வான், சூர்யகுமாரை பின்னுக்கு தள்ளி.. ஆஸ்திரிய வீரர் உலக சாதனை

20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்து ஆஸ்திரிய வீரர் உலக சாதனை படைத்தார்.
ரிஸ்வான், சூர்யகுமாரை பின்னுக்கு தள்ளி.. ஆஸ்திரிய வீரர் உலக சாதனை
Published on

இல்போவ் கவுண்டி,

ஆஸ்திரியா- ருமேனியா கிரிக்கெட் அணிகள் 4 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடியது. இதில் முதலாவது ஆட்டத்தில் 57 ரன் எடுத்த ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 2-வது ஆட்டத்தில், 90 ரன்களும், 3-வது ஆட்டத்தில் 74 ரன்களும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்களும் எடுத்து அசத்தினார். தொடரையும் ஆஸ்திரியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

30 வயதான கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ம் ஆண்டில் 1,326 ரன்), இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ம் ஆண்டில் 1,164 ரன்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி புதிய உலக சாதனை படைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com