அகமதாபாத்தில் மழை....ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுமா ?


அகமதாபாத்தில் மழை....ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுமா ?
x

இறுதிப்போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்றுகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

இந்த நிலையில் , அகமதாபாத்தில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது.இதனால் ஆடுகளம் மூடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஒருவேளை மழை காரணமாக இன்று போட்டி நடைபெறவில்லையென்றால் நாளை (ரிசர்வ் டே) போட்டி நடைபெறும்.

ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் சிறந்த தரவரிசையை பெற்ற பஞ்சாப் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story