மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா
x

Image Courtesy: @BCCIWomen

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக மந்தனா 117 ரன்கள் எடுத்தார்.

லக்னோ,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்தது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 292 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக மந்தனா 117 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 293 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட ஆஸ்திரேலிய அணியினர் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 190 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 102 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக அன்னாபெல் சதர்லேண்ட் 45 ரன் எடுத்தார்.

இந்தியா தரப்பில் கிராந்தி கவுட் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் வரும் 20ம் தேதி நடக்கிறது.

1 More update

Next Story