திருவள்ளூர் பிரீமியர் லீக் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி வெற்றி

கோப்புப்படம்
ஐ.ஓ.பி. அணியில் பார்தாஸ் திர்கே 3 கோலும், சுதீப் சிர்மாகோ ஒரு கோலும் அடித்தனர்.
சென்னை,
3-வது திருவள்ளூர் பிரீமியர் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.
இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) அணி 4-1 என்ற கோல் கணக்கில் மாஸ்கோ மேஜிக்கை தோற்கடித்தது. ஐ.ஓ.பி. அணியில் பார்தாஸ் திர்கே 3 கோலும், சுதீப் சிர்மாகோ ஒரு கோலும் அடித்தனர்.
தெற்கு ரெயில்வே-ஏ.ஜி.அலுவலகம் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தெற்கு ரெயில்வே அணியில் சண்முகமும், ஏ.ஜி. அணியில் வீரத் தமிழனும் கோல் அடித்தனர்.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் தயாந்த் வீரன்ஸ்-ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி (பிற்பகல் 2.30 மணி), எஸ்.எம்.நகர்- பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.






