சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் எரிகைசி முதல் தோல்வி


சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் எரிகைசி முதல் தோல்வி
x

கோப்புப்படம்

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது.

சென்னை,

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 பேர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, சக நாட்டவரான நிஹால் சரினை எதிர்கொண்டார். இதில் அர்ஜுன் எரிகைசி 70-வது நகர்த்தலில் நிஹால் சரினிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தொடரில் அவர் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய கார்த்திகேயன் முரளி (இந்தியா) 46-வது நகர்த்தலில் ஜோர்டென் வான் பாரஸ்டை (நெதர்லாந்து) தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவு செய்தார். அவோன்டர் லியாங்- ராய் ராப்சன் (இருவரும் அமெரிக்கா), அனிஷ் கிரி (நெதர்லாந்து)- வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), விதித் குஜராத்தி- பிரணவ் (இருவரும் இந்தியா) இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

4-வது சுற்று முடிவில் வின்சென்ட் கீமர் 3½ புள்ளிகளுடன் முதலிடத்திலும், அர்ஜுன் எரிகைசி 2½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். சேலஞ்சர்ஸ் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய தமிழக வீரர் இனியன் 45-வது நகர்த்தலில் ஆர்யன் சேப்ராவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றார்.

தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி 43-வது நகர்த்தலில் அபிமன்யு புரானிக்கிடம் பணிந்தார். மற்ற ஆட்டங்களில் லியோன் லூக் மென்டோன்கா, ஹரிகாவையும், தீப்தயன் கோஷ், ஹர்ஷவர்தனையும் வீழ்த்தினர். பிரனேஷ்- அதிபன் இடையிலான ஆட்டம் டிரா ஆனது. இன்று 5-வது சுற்று ஆட்டங்கள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

1 More update

Related Tags :
Next Story