பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

பிரக்ஞானந்தா இந்த தொடரில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
பிராக்,
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 29-வது நகர்த்தலில் நுயென் தாய் டாய் வானை (செக்குடியரசு) தோற்கடித்தார். முதல் இரு ஆட்டங்களில் டிரா கண்டு இருந்த பிரக்ஞானந்தா இந்த தொடரில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





