வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்

மாநில அளவிலானப் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-இன் மாநில அளவிலானப் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையருக்கு வழங்கப்படும் உணவு வகைகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். உணவின் தரம் குறித்து வீரர்களிடம் கேட்டறிந்து, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

களம்_நமதே என்று பதக்கங்களைக் குவித்து, தேசிய - சர்வதேச அளவிலும் சாதிக்க நம் வீரர் - வீராங்கனையரை வாழ்த்தினோம். என தெரிவித்துள்ளார் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com