எதிர்காலத்திற்காக உருவாக்கப்படும் அதிநவீன நகரங்கள்...!


எதிர்காலத்திற்காக உருவாக்கப்படும் அதிநவீன நகரங்கள்...!
x

உலகம் நொடிக்கு நொடி அதிவேகத்தில் நகரமயமாகி வருகிறது. ஐ.நா சபையின் ஆய்வுப்படி 2050-ம் ஆண்டில் நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 6.5 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ், நியூயார்க், டோக்கியோ ஆகிய நகரங்களை இதற்கான திட்டமிடுதலோடு, கட்டமைக்கும் வேலைகளும் வேகம் பிடித்துள்ளன. அப்படி, உலக நாடுகளில் தயாராகி வரும் அதிநவீன நகரங்களையும், அதன் சிறப்புகளையும் தெரிந்து கொள்வோமா..!

* சீனா (ஷாங்காய், டாட் டவுன்)

ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், 1.3 மில்லியன் சதுர அடியில் ஜில்லென ஷாப்பிங் மால், 5 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடியில் சூப்பர் மார்க்கெட், 53 ஆயிரம் சதுர அடியில் கலாசார மையம் என பளபளவென தயாராகும் டாட் டவுனில் பசுமைக்கூரை, மரங்கள் என ஏராளமான இடமுண்டு. 2014-ம் ஆண்டு தொடங்கிய இந்த புராஜெக்ட் மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள். இந்த நகரத்திற்கான பொறுப்பு ஹாங்காங்கின் ஸ்டூடியோ லீட் 8 மற்றும் அமெரிக்காவின் கோயிட்ஷ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

* எகிப்து (கெய்ரோ, கெய்ரோ கேபிடல்)

எகிப்தில் நியூ கெய்ரோ கேபிடல் என்ற பெயரில் உருவாகும் நகரத்திற்கான திட்ட மதிப்பு 45 பில்லியன் டாலர்கள். திட்டம் தொடங்கியது 2015-ம் ஆண்டு. இதில் மொத்தம் 21 மாவட்டங்களில் 5 மில்லியன் மக்கள் வசிக்கலாம்.

1,250 மசூதிகள், தேவாலயங்கள், 5 ஆயிரம் பேர் அமரும் கலாசார மையம், 2 ஆயிரம் பள்ளி, கல்லூரிகளோடு உலகின் மெகா பூங்காவும் இங்கு அமையவிருக்கிறது. சீனா பார்ச்சூன் லேண்ட் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியோடு நடைபெற்று வரும் இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமை பெற்றுவிடும்.

* பிரான்ஸ் (பாரீஸ், ஐரோப்பா சிட்டி)

டச்சு கட்டிட நிறுவனம் ஒன்று ஐரோப்பிய நகரில் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், பிளாசா, கோல்ப் மைதானம் ஆகியவற்றை 8.6 மில்லியன் சதுர அடியில் டிசைன் செய்து கட்டி வருகிறது. 2016-ம் ஆண்டு தொடங்கிய பிளான் மதிப்பு 3.4 பில்லியன் டாலர்கள். திட்டம் 2024-ம் ஆண்டு முடிந்துவிடும்.

* பிரேசில் (சாபாலோ)

வீடுகள், பஸ், சைக்கிள் பாதைகள், பூங்காக்கள் என பளபளவென புத்தம் புதிதாக டிசைன் செய்யப்பட்டு உருவாக்கப்படஇருக்கின்றன. புதிதாக 7 லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 2030-ம் ஆண்டுக்குள், 2 லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படும்.


Next Story