மேற்குத்தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத்தீ

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரம் நாழிமலை பகுதிகளில் நேற்று மாலை முதல் 7 இடங்களில் காட்டுத்தீ பரவியது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி, 7 இடங்களில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தற்போது 2 இடங்களில் தீயானது பரவி வரும் நிலையில், தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





